வீடுகள் தவிர விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு உணவளிக்கும் உணவகங்கள் திறக்கலாம்.

அத்தியாவசிய பணிகளை மேற்கொள்பவர்களுக்கு 144 தடை உத்தரவு இல்லை. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளான மருந்து, காய்கறி, பால், மளிகை போன்ற கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளையும் மூடப்படும்.


வீடுகள் தவிர விடுதிகளில் தங்கியிருப்பவர்களுக்கு உணவளிக்கும் உணவகங்கள் திறக்கலாம்.



அம்மா உணவகங்கள் வழக்கம் போல் செயல்படும். தனியார் நிறுவனங்கள் பணியாளர்களை வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதிக்க வேண்டும். தடை உத்தரவு நாட்களில் வேலைக்கு வராத நாட்களில் சம்பளம் பிடித்தம் செய்யக்கூடாது. இந்த தடை நாட்களில் பொதுப்போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, ஆட்டோ, டாக்ஸி இயங்காது. கட்டுப்பாடுகள் தொடர்பான விரிவான அறிக்கைகள் இன்று மாலை அறிவிக்கப்படும். இவ்வாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.